Sunday, September 7, 2008

முத்தம்



அப்படி பார்க்காதே!


அப்படி எல்லாம் பார்க்காதே
மீனவானகி விடுவேன்!
- ஜெயந்தி குமார்

காதல்



குழந்தையின் சிரிப்பில்
உன்னையும்,
அழுகையில் என்னையும்
பார்க்கிறேன்...
காதல் - கை கொட்டி சிரிக்கிறது

முற்றுப்புள்ளி


நீ வைத்த
முற்றுப்புள்ளியிலிருந்து
மையெடுத்தேன்
என் முதல் காதலுக்கு!
கடிதங்களில் நீ வைக்கும்
முற்றுப்புள்ளிகளில்இருந்து
மை எடுத்தேன்,
உன் இமைகளுக்கு!

விடுமுறை



விடுமுறை

இசைப்பள்ளிக்கு
விடுமுறை!
என்னவள்
கொலுசு
தொலைந்துவிட்டது!

காத்திருப்பு


உனக்காக காத்திருந்து
கல்லாகி விட்டேன் !
வருவோர் போவோர்
வந்தமர்வதற்குள்
வந்துவிடு !

கண்களும் கண்ணீரும்



உன் இமைச்
சிமிட்டலின்
அழகையெல்லாம்
என்னிமைகள்
கண்ணீரால் வர்ணித்துக்
கொண்டிருக்கின்றன
........................................

நீ உன் கண்களால்
மட்டும்தான் பார்க்கிறாய்
நான் என் கண்ணீராலும்
உன்னைதான் பார்க்கிறேன்
..............................................

நாம் ஒன்றாய் சிரித்த சிரிப்புகள்
என் கண்களிலிருந்து
இரட்டைத்துளிகளாய்
விரிகின்றன
...............................................

உன்னை விட்டு விலகி
நின்று பார்த்தால்
என் வானம் எல்லாம்
கண்ணீராய் தெரிகிறது